11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

பலத்த மழை காரணமாக களு, நில்வளா, களனி உள்ளிட்ட சில ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு, குறித்த ஆறுகளின் இருமருங்கிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பலத்த மழையின் காரணமாக இராஜாங்கனை, கலாவெவ, தப்போவ மற்றும் தெதுரு ஓயா உள்ளிட்ட 15 நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *