எதிர்வரும் 7ஆம் திகதி அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 7ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் எதிர்வரும் 04ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள், செயலமர்வுகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் தனியார் வகுப்புக்கள் உள்ளிட்ட அனைத்தும் பரீட்சைகள் நிறைவடையும் வரை தடை செய்யப்படுவதாகவும்  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் டிசம்பர் 8 ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் எனவும்  கல்வி அமைச்சு  மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *