கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஜெயாநந்தி திருச்செல்வம் தலைமையில் நேற்று முன்தினம்(26) இடம்பெற்றது.
வாழைச்சேனை- ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன், வைத்தியர் ருக்க்ஷாலினியின் பங்களிப்புடன் தொற்றா நோய்கள் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது வருகைதந்த உத்தியோகத்தர்களுக்கு பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இச் சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது.
இப் பரிசோதனையில் பிரதேச செயலகத்தின் 50 மேற்பட்ட உத்தியோகத்தர்கள் தம்மைப் பரிசோதனை செய்துகொண்டனர்.
