அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப் படையினர் நேற்று(31) கைது செய்துள்ளனர்.
கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கையின் போது 39 வயதுடைய சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீண்ட நாட்களாக மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து ஐஸ் போதைப்பொருட்களை விற்பனை செய்ததுடன், விற்பனைக்காக இருந்த ஐஸ் போதைப் பொருளையும் கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 510 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப் பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மற்றும் கல்முனை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.