தர்மபுரத்தில் 80 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்று(09) கசிப்பு உற்பத்தி நடைபெற்ற குமாரசாமிபுரம் பகுதி அமைந்துள்ள வாய்க்கால் பகுதியை சுற்றி வளைத்த பொழுது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

அத்துடன் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் 80 லீற்ற் கசிப்பினையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *