வற்றாப்பளைக்கு சென்று திரும்பிய இளைஞன் விபத்தில் உயிரிழப்பு  

முல்லைத்தீவு வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று திரும்பிய இளைஞன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

 

உந்துருளியில் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் விபத்துக்குள்ளாகிய இளைஞன் வாய்க்காலினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

 

இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கும் பொது மக்கள் நித்திரை காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.

 

உயிரிழந்த இளைஞன்  தொடர்பான மேலதிக விபரங்கள்  உடனடியாக பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *