பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – சிறீதரன் எம்.பி

60000 மக்கள் விடுதலை முன்னணியினரைக் கொன்றதும் இந்த பயங்கரவாத சட்டமே மாற்று சட்டம் இன்றி உடனடியாக நிறுத்த வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

 

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் இன்று(13) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்பு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற இவ்வாறு தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் கிளிநொச்சியைச் சேர்ந்த பாடகர் சங்கீத்சன் பயங்கரவாத சட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

குறித்த சட்டம் மாற்றப்பட்டு சாதாரண சட்டம் மூலம் பிணையில் விடுதலையாகியுள்ளார்.இதற்கு நாட்டின் தலைமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன். சங்கீத்சனை சிறையில் சென்று பார்வையிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

 

அதனைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜிதஹேரத்தை சந்தித்து குறித்த விடயம் தொடர்பாக பேசியிருந்தேன்.

 

கடந்த புதன்கிழமை ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசியிருந்தேன் அதன்போது சாதாரண பிணையில் அவரை எடுக்க முடியும் என தெரிவித்திருந்தார்.

 

கடற்றொழில் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்டோரிடமும் பேசியிருந்தேன். மக்களின் குரலுக்கு செவிசாய்த்து இந்த அரசாங்கம் விடுதலை செய்துள்ளது.

 

அனைவரின் முயற்சியுமே விடுதலைக்கு காரணம் குறிப்பாக சட்டத்தரணிகள் 60000 மக்கள் விடுதலை முன்னணியினரை கொன்றதும் பல இலட்சம் எமது மக்களை கொன்றதும்  இந்த பயங்கரவாத சட்டமே மாற்று சட்டம் இன்றி உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசு முன்னெடுத்துள்ள விசாரணை தொடர்பாகவும் கருத்து தெரிவித்திருந்தார். ஒரு இனத்தை அல்லது மதத்தை எப்படி கொல்லலாம் என திட்டமிட்ட செயற்பாட்டை அனுமதிக்க முடியாது. முஸ்லீம் மக்களை வைத்து தமிழ் மக்கள் தான் அதிகம் கொல்லப்பட்டுள்ளனர்.

 

சுரேஸ் சாலே போன்ற குற்றவாளிகளை கைது செய்து எவற்றிற்கும் அச்சப்படாது நீதியை நிலை நாட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

சொல்லிசை பாடகர் சங்கீர்த்தனன் கடந்த மாதம் பயங்கரவாத தடை சட்ட பெண்கள் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் சாதாரண சட்டத்தின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞனை விடுதலை செய்த நாட்டின் தலைவர் மாண்புமிகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் மற்றும் புலம்பெயர் தேசத்தில் வாழும் எமது உறவுகள் மற்றும் எம்நாட்டு உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *