வடமாகாண இறுதி போட்டியில் கேடயத்தை நாவாந்துறை தமதாக்கியது

மேரி றெஜினா ஞாபகார்த்த பொற்பதி சமூக சேவை ஒன்றியத்தினூடாக பருத்தித்துறை லீக் அனுமதியுடன் பொற்பதி சென்பீற்றர்ஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் 9 பேர் கொண்ட மாபெரும் உதை பந்தாட்ட சுற்றுப் போட்டி இடம்பெற்றது.

இறுதிப் போட்டி நேற்று (06)பிற்பகல் 4:00 மணியளவில் பொற்பதி சென் பிற்றஸ் விளையாட்டு கழக தலைவர் செ.டிசாந்த் தலமையில் ஆரம்பமானது.

மங்கள சுடர்கள்களை  வட மாகாண ஆளுநரின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,  மணல்காடு பங்குத்தந்தை ஜோன் குருஸ், பங்குத்தந்தைகள், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, பருத்தித்துறை லீக் தலைவர் நவநீதமணி, அருட்சகோதரிகள் உட்பட பலரும் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து தேசியக்கொடியை வடமாகாண பிரதம செயலர் ஏற்றிவைக்க பொற்பதி சமூக சேவை ஒன்றியம், பொற்பதி சென்பீற்றஸ் விளையாட்டு கழக கொடிகளும்  ஏற்றிவைக்கப்பட்டன.

கடந்த 12/02/2025 அன்று ஆரம்பமான போட்டிகளில் 60 கழகங்கள் பங்குபற்றியிருந்தன இதில் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டு கழகம், இமையாணன் மத்தி விளையாட்டு கழகங்கள்  இறுதி போட்டியில் மோதின.

இதில் இரண்டு கோல்களைப்போட்டு நாவாந்துறை சென்மேரீஸ் விளையாட்டு கழகம் கேடயத்தை தமதாக்கிக் கொண்டது.

இந்நிகழ்வில் உரைகளை மணல்காடு மங்குத்தந்தை ஜோன் குருஸ், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநரின் செயலாளர் திரு. நந்தகோபாலன் ஆகியோர் வழங்கினர்.

இதில் வெற்றி பெற்ற நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டு கழகத்திற்கு ரூபா 500000/- பணப்பரிசும், வெற்றிம் கேடயமும் இரண்டாவதிடத்தை பெற்றுக் கொண்ட இமையாணன் மத்தி விளையாட்டு கழகத்திற்க்கு ரூபா 200000/- பணப்பரிசும், கேடயமும் சிறந்த வீரர்கள், ஆட்ட நாயகன் ஆகியோருக்கான வெற்றிக் கோப்பைகளும், பணப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதில் முன்னாள் அம்பாறை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் மு.ஜெஸ்ரீஸ், வட மாகாணத்திற்கு உட்பட்ட பல்வேறு கழகங்களின் வீரர்கள், ரசிகர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டு போட்டிகளை கண்டுகளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *