திருக்கோவில் ஷீரடி சாயி கருணாலயத்தின் நான்காவது ஆண்டுவிழா

சிவபூமியாம் இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேசத்தில் வயல் வெளியும் மலை ஆறுகளும் சூழ அழகிய கிராமமான தாமரைக்குளம் கிராமத்தில் தனிக்கோயில் கொண்ட இலங்கை மக்களினால் போற்றப்பட்டும் தாமரைக்குளம் ஷீரடி சாயி கருணாலயத்தின் வருடாந்த ஆண்டு விழா கடந்த 2025/04/03 திகதி பஞ்ச பூதங்களின் ஆசிவாதத்துடன் ஷீரடி நாதருக்கு பாலாபிஷேகத்துடன் ஆரம்பமானது.

இவ் ஆண்டு விழாவானது தொடர்ச்சியாக பத்து நாட்கள் இடம்பெற்ற 2025/04/12 திகதி பைரவர் பூசையுடன் நிறைவடையவுள்ளது.

விழாவை சிறப்பிக்க மலேசியாவில் இருந்து சர்வதேச ஆன்மிகவாதியும் ஆன்மீக சுற்று குழுமத்தின் தலைவருமான மாயா மாதாஜி அவர்கள் வருகை தந்துள்ளார்.

அதனை தொடர் அவர்களின் ஆன்மீக உரையும் தினசரி 12.00 மணி மதிய நேர விசேட உரையும் மக்களுடன் கலந்துரையாடலும் நிகழ்த்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆலயத்தின் சகல நிகழ்வுகள் யாவும் ஆலய ஸ்தாபகர் மட்டக்களப்பு பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும் நோர்வே நாட்டை வசிப்பிடமாக கொண்ட சீதாவிவேக் அவர்களின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது மேலும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *