ஐபிஎல் 2025 தொடரின் டெல்லி கேபிடல்ஸ் அணியை ஆர்சிபி அணி வீழ்த்தியது

ஐபிஎல் 2025 தொடரின் நேற்றைய(27) ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை ஆர்சிபி அணி வீழ்த்தியது.

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச முடிவு செய்தது. இதன்படி டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் அசோக் பொரெல், டூ ப்ளெஸ்ஸிஸ் இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் அசோக் பொரெல் 28 ஓட்டங்களுடனும் டூ ப்ளெஸ்ஸிஸ் 22 ஓட்டங்களுடன் வெளியேறினர்.

கருண் நாயர் 4 ஓட்டங்களுடன் நடையை கட்டினார். அடுத்து களமிறங்கிய கே.எல். ராகுல் 41 ஓட்டங்கள் விளாசினார். அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவே. அக்சர் படேல் 15, ஸ்டப்ஸ் 34, அஷுடோஷ் சர்மா 2, விப்ராஜ் நிகாம் 12 என 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது டெல்லி அணி.

163 எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியின் ஜேக்கப் பெதெல் 12 ஓட்டங்கள் எடுத்தார். கோலி அரை சதம் எடுத்து அசத்தினார். அதிகபட்சமாக க்ருணல் பாண்டியா 73 ஓட்டங்கள் விளாசினார். இதன் படி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *