தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் உழைப்பாளர் தின கூட்டம்

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் உழைப்பாளர் தின கூட்டம் இன்று (01) இடம்பெற்றது.

 

இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றது.

 

கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந. ஸ்ரீகாந்தா, அரசியல் செயற்பாட்டாளர் க. அருந்தவபாலன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *