சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற நால்வர் கைது

சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற சம்பவங்கள் தொடர்பில் நால்வரை கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

 

நேற்று(01) இடம்பெற்ற 3 வெவ்வேறு சம்பவங்களில் கிளிநொச்சியைச் சேர்ந்த 2 பேர், வாழைச்சேனையைச் சேர்ந்த 2 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அதற்கமைய, நேற்று பிற்பகல் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரமொன்றில் மண் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேகநபர் 24 வயதான கிளிநொச்சி மருதநகர் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

இதேவேளை, நேற்று மாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரமின்றி லொறி ஒன்றில் மணல் ஏற்றிச் சென்ற 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சந்தேகநபர்கள் 46 மற்றும் 51 வயதுகளுடைய வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை, நேற்று மாலை கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரமொன்றில் மணல் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேகநபர் 37 வயதான கிளிநொச்சி, மருதநகர் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

அந்தந்த பிரிவிலுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பில், குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

அதற்கமைய, கிளிநொச்சி, வாழைச்சேனை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *