லண்டனில் கார் விபத்தில் யாழ் இளைஞன் உயிரிழப்பு

லண்டன் – சவுத் ஹாரோவில் உள்ள ஈஸ்ட்கோட் லேன் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.

 

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், அந்த வீதியில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு காரைக் கவனித்து, அதனைப் பின்தொடர முயன்றபோது, அந்தக் கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதியது.

 

விபத்தில் 29 வயதான மகேஸ்வரன் பிரவீன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

 

மேலும் இரு இளைஞர்கள் (25 மற்றும் 20 வயது) காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

 

உயிரிழந்த மகேஸ்வரன் பிரவீன், யாழ்ப்பாணம் புங்குடுதீவு 6ஆம் மற்றும் 3ஆம் வட்டாரம் வேம்படியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் லண்டன் சவுத் ஹாரோவை வதிவிடமாகக் கொண்டுள்ளார்.

 

இந்த விபத்து தொடர்பான சூழ்நிலைகள் குறித்து லண்டன் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *