புதுமுறிப்பு குளத்தில் மீன் குஞ்சுகள் விடும் நடவடிக்கை

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டத்தின் கீழ் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குளங்களில் மீன் குஞ்சுகள் விடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

இன்று(06) கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தில் 27000மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

 

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கலந்து கொண்டிருந்தார்.

 

குறித்த நிகழ்வில் உயிரினச்செய்கை விரிவாக்கல் உத்தியோகத்தர் மதுசனும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *