யாழ்ப்பாணம் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றிப் பயணித்த மகேந்திரா கப் ரக வாகனம் பரந்தன் வீதி ஊடாக முல்லைத்தீவுக்கு சென்று கொண்டிருந்தபோது வெளிக்கண்டல் பகுதியில் அதி வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாலத்துடன் மோதுண்டு பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் வாகன ஓட்டுனரின் உதவியாளர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

