நல்லூரில் அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி போராட்டம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று(20) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக நேற்று மாலை 4.30 மணியளவில் ஆரம்பித்த போராட்ட பேரணி யாழ். மாநகர சபை முன்பாக நிறைவடைந்தது.

 

இதன்போது யாழ். மாநகர சபைக்கு முன்பாக திறக்கப்பட்ட அசைவ கடைக்கு எதிராகவும் போராட்டக்காரர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

 

பின்னர் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் யாழ். மாநகர ஆணையாளரை சந்தித்து தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

 

குறித்த போராட்டத்தில் சைவ சமய தலைவர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், சைவ சமய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *