வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் இன்று(22) பி. ப 04.00 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டம், வீதி அபிவிருத்தி திட்டம், வீட்டுத் திட்டம், குடிநீர், போன்ற திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாகவும் அரசாங்க அதிபர் தலைமையில் ஆராயப்பட்டு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
மேலும், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம், வீதி அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற
அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை இவ்வாண்டு நவம்பர் மாத இறுதிக்குள் சரியான முறையில் பயன்படுத்துமாறு பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசாா் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.