புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை ராக்கிங் செய்ய வேண்டாம் எனத் தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் ஒருவரை நேற்று முன்தினம்(23) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது,
குறித்த பல்கலைக்கழகத்தில் விவசாயப் பீடத்தில் 3ம் ஆண்டில் கல்வி கற்று வரும் சிங்கள மாணவர்களுக்கிடையே புதிதாக பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்களை ராக்கிங் தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாதத்தின் போது மாணவி ஒருவர் ராங்கிங் செய்ய வேண்டாம் என தெரிவித்ததையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த மாணவியின் கன்னத்தில் சக மாணவன் ஒருவர் தாக்கியதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மாணவியை தாக்கிய சக மாணவனை பொலிஸார் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.