புனரமைக்கப்படும் கடவுச்சீட்டு அலுவலகத்தை கடற்றொழி்ல் அமைச்சர், மாவட்ட செயலர் பார்வையிட்டனர்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் துரித கதியில் புனரமைக்கப்பட்டு வரும் கடவுச்சீட்டு அலுவலகத்தை கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று(27) மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் சகிதம் பார்வையிட்டார்.

 

இதன் போது இதுவரை நடைபெற்ற வேலைகளின் முன்னேற்றத்தினை அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

 

மேலும், கடவுச்சீட்டு பெற வரும் பொதுமக்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் அமைக்கப்படவுள்ள கொட்டகை மற்றும் கடவுச்சீட்டு அலுவலகத்தில் கடமையாற்றவுள்ள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி விபரங்களை அமைச்சருக்கு மாவட்ட செயலர் எடுத்துக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *