பூநகரியில் இளைஞன் மீது இனம் தெரியாதவர்களால் வாள்வெட்டு தாக்குதல் 

பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூநகரி தம்பிராய் பகுதியில் இன்று(31) மாலை ஆறு முப்பது மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் மீது இனம் தெரியாதவர்களால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

 

28 வயதுடைய கந்தசாமி பிரணவன் எனும் பூநகரி செம்பங்குன்று பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

இறந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

அத்துடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *