தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும், தமிழ் இணையக் கல்விக் கழகமும் இணைந்து நடாத்திய வடமாகாணத்தின் 8ஆவது பட்டமளிப்பு விழா யாழ்.சாவகச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐங்கரன் மணி மண்டபத்தில் இன்று (05) இடம்பெற்றது.
தமிழ் இணைய கல்விக்கழக வடமாகாண இணைப்பாளரும், முதன்மை விரிவுரையாளருமான க.ரஜனிகாந்தன் தலைமையில் பட்டமளிப்பு விழா இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி மயில்வாகனம் இரகுநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி வைத்தார்கள்.

