ஒலுவில், அல் – ஹம்றா மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர் எஸ்.ஹாஸீக் இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சம்சுதீன், கபீரா தம்பதியரின் புதல்வரான இவர் தனது பாடசாலைக் கல்வியை ஒலுவில் அல் – ஹம்றா மகா வித்தியாலயத்தில் கற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து அவிசாவளை தல்துவ முஸ்லிம் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலத்திற்கு இடமாற்றம் பெற்றார்.
இவர் கல்வி டிப்ளோமா மற்றும் கல்வி முதுமாணி ஆகிய பட்டங்களைபு பெற்றுள்ளார்.
இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கான நேர்முகத் தேர்வினை நிறைவு செய்து எதிர்வரும் ஜுன் மாதம் 2ம் திகதி நியமனம் பெற்றுள்ளார்.