உற்பத்திறன் 5எஸ் மதிப்பிட்டாளர்களுக்கான பயிற்சி செயலமர்வானது மாவட்ட உதவி செயலாளர் ஜீ. பிரணவன் தலைமையில் மூன்று நாட்களைக் கொண்ட பயற்சி பாசறையின் ஆரம்ப நிகழ்வு(28) இடம்பெற்றது.
மாவட்ட உற்பத்தித் திறன் உத்தியோகத்தர் ஆர். புவனேந்திரனின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்த்தவர்கள இப் பயிற்சி பாசறையில் கலந்து கொண்டனர்.
இப் பயிற்சி பாசறையில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்கள் 5எஸ் போட்டிகளுக்கான மதிப்பிட்டாளர்களாக செயற்படவுள்ளனர்.
இந் நிகழ்வில் தேசிய உற்பத்தி திறன் செயலக 5எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுகத் பண்டார திசநாயக்க கலந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இவ்வாறான பயிற்சி நெறி மாவட்டத்தில் முதற்தடவையாக இடம் பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.