சம்மாந்துறையிலுள்ள இலங்கை போக்குவரத்து பஸ்களை திருத்தும் அரங்குக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா விஜயத்தினை நேற்று முன்தினம்(27) மேற்கொண்டு, அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் அதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எதிர் காலத்தில் எடுக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
அழிவடைந்து காணப்படும் இவ்விடத்தை துரிதகதியில் உயிர்ப்பிப்பதற்கான முயற்சியாக தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் இக்கள விஜயம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.