வாழைச்சேனை கண்ணகிபுரம் பாரதி பாலர் பாடசாலையில் சிறுவர் சந்தை

மாணவர்களின் திறன் விருத்தியை மேம்படுத்தும் முகமாக வாழைச்சேனை கண்ணகிபுரம் பாரதி பாலர் பாடசாலையில் சிறுவர் சந்தை நிகழ்வு பாடசாலை சமூகத்தினால் இன்று(29) ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இதன்போது மாணவர்கள் தங்களது பெற்றோர்களின் பங்களிப்புடன் பல்வேறுபட்ட சந்தைப் பொருட்களை காட்சிப்படுத்தி அவற்றினை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 

இதில் சூழலைப் பாதிக்காத பொலித்தின் பாவனையை தடுக்கும் வகையில் துணியினால் தயாரிக்கப்பட்ட கைப் பைகள் சேதனப் பசளையில் தயாரிக்கப்பட்ட நஞ்சற்ற மரக்கறிப் பொருட்கள், இயற்கை குளீர் பானங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் என பல்வேறு வகையிலான சந்தைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

 

அவற்றினை பலர் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து மாணவர்களின் இச் செயற்பாட்டினை ஊக்குவித்தனர்.

 

இந் நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம், சமூகசேவை உத்தியோகத்தர் சி. ஜெயசேகர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

 

அத்துடன் கிராம சேவை உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், பொதுச் சுகாதார மருத்துவ மாது மற்றும் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஆகியோர் கலந்து கொணடனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *