கிளிநொச்சி மாவட்ட வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று கையளிக்கப்பட்டது.

மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் வைத்து மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராசா மாவட்ட பிரதான அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் கையளித்தார்.

2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 102387 பேர் வாக்காளிக்க தகுதிபெற்றுள்ளனர்.

நாளை (17.04.2025) முதல் வாக்காளர் அட்டை வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *