வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த வியட்நாம் தூதுவர் தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தலைமையிலான குழுவினரை இன்று மாலை(17) ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், கல்வி, விவசாய, உள்ளூராட்சி, சுகாதார அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திட்டமிடல் பிரதிப் பிரதம செயலாளர் – ஆகியோர் கலந்து கொண்டனர்.

