வியாபார நிலையம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி தீக்கிரை

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபயபுர பகுதியில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான மொத்த வியாபார நிலையம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறியரக லொரி ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

 

குறித்த வியாபார நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த வாகனமானது நேற்று(06) இரவு தீப்பற்றிய நிலையில் திருகோணமலை நகரசபை தீயணைப்பு வீரர்களால் தீயானது அருகில் இருக்கும் கட்டடங்களுக்குப் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

 

மேலும் தீக்கான காரணம் இன்னமும் அறியப்படாத நிலையில் திருகோணமலை உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *