டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 19 ஆவது போட்டியில் ஸிம்பாப்வே மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்படுத்தாடிய ஸிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களைப் பெற்றது.
ஸிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ப்ரியன் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 64 ஓட்டங்களை (7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அடித்து அசத்தினார்.
இதனையடுத்து 170 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய அவஸ்திரேலிய அணி, 19.3 ஓவரில் 146 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதன்மூலம் ஸிம்பாப்வே அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

