இஸ்ரேல் தாக்குதல்; மீண்டும் பதற்றமடையும் மத்திய கிழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதென்யாகு இரான் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்ட போதிலும், வார இறுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட பழிக்குப்பழி தாக்குதல்கள் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

ஏப்ரல் மாத போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் முறையாக இரானின் பல்வேறு இலக்குகள் மீது இஸ்ரேல் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்கு முன்னர், லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, இஸ்ரேல் நோக்கி இரான் ஏவுகணைகளை செலுத்தியிருந்தது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து இரானுக்கு எதிராக போர் நடவடிக்கைகளை ஆரம்பித்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும், பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை இன்னும் ஆபத்தானதாகவே இருப்பதை இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

அதேவேளை, டொனால்ட் டிரம்ப் தனது இஸ்ரேலிய கூட்டாளியை கட்டுப்படுத்த முடியாதோ அல்லது கட்டுப்படுத்த விரும்பாதோ என்ற நிலை தென்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதை நன்கு அறிந்துள்ள ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான கருத்து வேறுபாடுகளை தனது நலனுக்காக பயன்படுத்த முயற்சிப்பதாகவும் மதிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *