கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மலையாளபுரம் வடக்கில் உள்ள தனியாருக்கு சொந்தமான தனிப்பட்ட நிலத்தில், தொல்பொருள் கலைப்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், கிளிநொச்சி பொலிஸாரால் 06, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி ஊழல் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு பின்வரும் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
அன்றைய தினம் இரவு 07.30 மணி அளவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் ஆறு பேரையும் இன்று(10) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

