வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலயத்தின் கொடியேற்றம்

மட்டக்களப்பு – வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலயத்தின் 182 வது வருடாந்த திருவிழா கடந்த 17ஆம் திகதி பங்குத்தந்தை ஏ.ஜென்சன் லொயிட் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

 

முதலாம் நவ நாளில் “திருக்குடும்பம் இறைவனின் அன்புத்திட்டத்தின் மாதிரி” என்ற சிந்தனையில் அருட்தந்தை அனிஸ்டன் மொறாயஸ் அருளுரையாற்றி திருப்பலி நிறைவேற்றினார். 3ம் வட்டார இறைமக்கள் திருப்பலியை சிறப்பித்தார்கள்.

 

ஆலயத்தின் திருவிழா கூட்டுத் திருப்பலி எதிர்வரும் 26ஆம் திகதி காலை 7.15 மணிக்கு நீதித்துறை ஆயர் பதிலாள் அருட்பணி யூலியின் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *