போதையில் பஸ்வண்டியை செலுத்திய சாரதி நேற்று(14) பல்லேகலை பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியில் இருந்து மஹியங்கனை, ஹந்துன்கமுவ நோக்கிப் பயணித்த மேற்படி பஸ்வண்டியை பல்லேகலை பிரதேசத்தில் வைத்து தூர இடங்களுக்கான பஸ் வண்டிகளை சோதனைசெய்யும் திட்டத்தின் கீழ் பொலிஸார் பொதுவாக சோதனையிட்டுள்ளனர்.
அதன் போதே குறித்த பஸ்வண்டியின் சாரதி மது அருந்தி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்டையில் உடனடியாகப் பொலிஸார் சாரதியை கைது செய்துள்ளனர்.
‘எல்கோலைசர்’ என்ற ஊதும் தொழில் நுட்ப முறையில் சாரதி பரீட்சிக்கப்பட்ட போதே மது அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
மேற்படி பஸ்வண்டி உடதும்பறை பஸ் டிப்போவிற்கு சொந்தமான ஒன்றாகும். சாரதியின் கைதை அடுத்து பயணிகளை வேறு பஸ்வண்டிகளில் அனுப்பவதற்கு பொலிஸார் ஒழுங்கு செய்ததுடன் குறி்ப்பிட்ட இ.போ.ச சாரதியையும் கைது செய்துள்ளனர்.
மேற்படி பஸ்வண்டியில் 50 பயணிகள் வரை இருந்ததாகவும் தெரிவித்த பொலிஸார் மேற்படி பாதை 18 வளைவுகளைக் கொண்ட பாதையூடாகச் செல்லும் ஒரு பஸ் என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்தனர்.