காலை முதல் மின்தடை; மின்சாரசபை கடமை தவறுவதாக மக்கள் குற்றச்சாட்டு

வவுனியாவின் பல பகுதிகளில் இன்று(17) காலை முதல் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில் மின்சாரசபைக்கு பலமுறை அறிவித்தும் பலன்இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

வவுனியாவில் இன்று காலை முதல் கடும்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் மின் தடை ஏற்ப்பட்டிருந்தது.

 

சில மணிநேரங்களின் பின்னர் குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு மின்விநியோகம் வழமைக்கு திரும்பியிருந்தது.

 

எனினும் மகாறம்பைக்குளம் மற்றும் தாண்டிக்குளத்தின் சில பகுதிகளில் காலை முதல் மின்தடை ஏற்பட்டுள்ளதுடன் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை.

 

இது தொடர்பாக அப்பகுதி மக்களினால் இலங்கை மின்சாரசபைக்கு பலமுறை அறிவிக்கப்பட்டும் அவர்கள் அசண்டையீனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *