யாழில் தமிழ் அரசுக் கட்சி – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இடையில் சந்திப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸிற்கும் இடையிலான சந்திப்பு இன்று(30) மாலை இடம்பெற்றது.

 

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

 

குறித்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் கட்சித் தலைவர் சி. வீ. கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரனும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செல்வராஜா கஜேந்திரனும் கலந்து கொண்டனர்.

 

உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக குறித்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *