பூநகரி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல்

2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் மற்றும் செலவீனங்கள் தொடர்பாக கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இடம் பெற்றது.

மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வேலாயுதம் சிவராசா தலைமையில் பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (11)நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பூநகரி பிரதேச சபையில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளரால் தேர்தல் பிரச்சாரத்தின் போது பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் மற்றும் வேட்பாளர் ஒருவர் பிரச்சாரத்தின் போது செலவு செய்யும் செலவீனங்கள் தொடர்பாகவும் மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *