காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பரிசோதனைகள் மற்றும் அணிவகுப்பு மரியாதை

பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களத்தினால், பொலிஸ் நிலையங்கள் மீதான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பரிசோதனைகள் இன்று(24) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் தலைமையில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி .அழககோனின் வழிகாட்டலில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஆடைகள் உட்பட பொலிஸ் நிலைய வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் என்பனவும் பரிசோதிக்கப்பட்டன.

பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையையும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *