திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் முதலாவது குழந்தை பிறந்தது

நீண்ட நாட்களாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் எந்த ஒரு மகப்பேறும் இல்லாத நிலையே காணப்பட்டது.

 

தற்போது புதிதாக மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் வைத்திய நிபுணராக டொக்டர் பாஸில் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று (24)முதலாவது பிரசவம் நடைபெற்றது. இதில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது வைத்தியசாலை வட்டாரத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

 

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மதன் மற்றும் வைத்திய நிபுணருக்கும் உத்தியோகத்தர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *