“மற்றவர்களின் உணர்வுகளை இனங்காண்பதும் அவற்றுக்கு எவ்வாறு பதில் அளிப்பதும்” நிகழ்வு

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் புதுக்குடிருப்பு கிராம சேவகர் பிரிவில் உள்ள பெத்தேல் சிறுமிகள் இல்லத்தில் பிரதேச செயலாளரின் வழிகாட்டலுக்கு அமைவாக “மற்றவர்களின் உணர்வுகளை இனங்காண்பதும் அவற்றுக்கு எவ்வாறு பதில் அளிப்பதும்” என்பது தொடர்பான செயற்பாடுகள் 19ஆம் திகதி நடைபெற்றன.
இதன்போது, பிரதேச செயலகத்தின் உளவள உதவியாளர்களினால் 20 மாணவர்களுக்கு கலந்துரையாடல் மூலம் இந்நிகழ்வு நடாத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *