சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயம் கோட்டத்தில் முதலிடம்

2026.04 01 ஆம் திகதி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி கமு/கமு/ மழ்ஹருஸ் ஷம்ஸ் மஹா வித்தியாலய மாணவர்கள் 75% சித்திகளையும் 08 மாணவா்கள் பல்கலைக்கழக வாய்ப்பையும் பெற்று சாதனை படைத்ததுள்ளதுடன் தோற்றிய 20 மாணவர்களுள் 15 மாணவர்கள்  பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பையும்  பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளதாக கல்லூரியின் அதிபர் நஸ்லின் றிப்கா அன்ஸார் தெரிவித்தார்.

 

சாய்ந்தமருது கோட்டத்தில் உள்ள உயர்தரம் கற்பிக்கும் பாடசாலைகளில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்று அதிகூடிய மாணவர்கள் இப் பாடசாலையில் இருந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

 

அதன்படி இம்முறை கலைப்பிரிவில் இருந்து பஸீர் முஹம்மட் அஜீபா 03 ஏ சித்தியும், எம்.ஏ. பாத்திமா தூபா 02ஏ, சி சித்தியும், எம்.எப். பாத்திமா ஹன்சுல் நுஸ்பா  02 ஏ, சி சித்தியும், எப். பாத்திமா அப்னா 02ஏ, சி சித்தியும், எம். ஆசிபா மெஹ்றூன் 02ஏ, சி சித்தியும், எப். பாத்திமா அப்னா 02ஏ, எஸ் சித்தியும், ஜே. பாத்திமா றிஸ்பா ஏ,பி,சி சித்தியும், ஆர். பாத்திமா சிப்னா A

ஏ,பி,சி சித்தியும் பெற்று இம்முறை பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

இத்தகைய சாதனையை நிகழ்த்திய மாணவர்களையும் உயர்தரப் பகுதியின் பகுதித்தலைவர் ஏ.எம்.அஜ்வத்தையும் இவர்களை ஊக்கப்படுத்தி, பாடங்களைக் கற்பித்த ஆசிரியர்களான ஏ.எம். அஜ்வத், ஏ.ஆர்.ஏ. அஷ்ரப்,  எம்.ஐ. பைசால்,  யூ.எல். அமீர் ஹுசைன், ஏ.எம்.ஜுனைதா, எம்.எப். ஐனுல் மர்சுனா, எஸ். நஜிபுடீன் ஆகியோருக்கு கல்லூரியின் அதிபர் திருமதி. எம்.சி. நஸ்லின் றிப்கா, பிரதி அதிபர் திருமதி எம்.எப்.ஐனுல் மர்சுனா, உதவி அதிபர் ஏ.எம்.பறூஸும் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என அனைவரும்  கல்லூரி சமூகம் சார்பாக பாராட்டி, தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

 

இவர்களை மாலை இட்டு வரவேற்று அவர்களுக்கான கௌரவம் வழங்கும் நிகழ்வு அதிபர் தலைமையில் நேற்று(02) பாடசாலையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *