கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் மற்றும் கிரவல் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று 10.04.2026 நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், பிரதேச செயலாளர்கள், கனியவளத்திணைக்களத்தினர்,பொலிசார்,கடற்றொழில் அமைச்சரின் இணைப்பாளர் எஸ்.கபிலன்,திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

