பிள்ளையாரடியில் தமிழரசு கட்சி ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17 வது நினைவேந்தலையிட்டு தமிழரசு கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் பிள்ளையாரடியில் உள்ள புரவி பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் ஒயிர் நீத்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

 

 

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள புரவி பிள்ளையார் ஆலய முன்றலில், யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டு, நினைவஞ்சலிச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பொதுமக்களுக்கு வழங்கினர்

 

 

இந்த நினைவேந்தல் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீநாத், மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் டினேஷ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் இளைஞர் அணி தலைவர். மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *