மன்னார் மாவட்ட உணவுப் பாதுகாப்புக் குழுக் கலந்துரையாடலானது பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதிஸ்வரனின் பங்குபற்றலுடன் இணைத் தலைவர்களாகிய மன்னார் மாவட்ட செயலாளர் கனகேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவசிறி ஆகியோரது தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன் போது விவசாயம், கடற்றொழில், கால்நடை உற்பத்தி ஊடாக உணவு உற்பத்திகளை அதிகரிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பிலும் அதனை ஊக்குவிப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

