இல்மனைட் அகழ்வை நிறுத்தக்கோரி ஜனாதிபதிக்கு தபாலில் கோரிக்கை

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கோரைக்களப்பு தோட்டத்தில் இடம்பெற்றுவரும் இல்மனைட் மாதிரி மற்றும் இல்மனைட் அகழ்வு போன்ற வற்றுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றும் தீர்வு சரியான தீர்வு இல்லா நிலையில் இன்றைய தினம் திருக்கோவில் மற்றும் விநாயகபுரம் , தாண்டியடி, உமிரி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களினால் ஜனாதிபதிக்கு இதனை தடுத்து நிறுத்தும் படி தபாலட்டை அனுப்பும் நடவடிக்கை இன்றைய தினம் திருக்கோவில் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வு பொதுமக்கள் மற்றும் சமுக அமைப்புக்கள் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டு இத் தபாலட்டை அனுப்பும் நடவடிக்கையினை முன்னெடுத்தனர். மேலும் தபாலட்டைகளும் அவர்களின் கரங்களினால் திருக்கோவில் தபால் நிலையத்தில் தபால் பெட்டியில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *