இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சிகரெட் தொகையுடன் பயணி கைது

இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கு மேல் மதிப்புள்ள சிகரெட் தொகையுடன் இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இவர் இன்று(28) காலை 8:35 மணியளவில் டுபாயிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

 

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இலங்கை சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சந்தேக நபர் கொண்டு வந்த 8 பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 83,600 சிகரெட்டுக்கள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

இந்த சிகரெட் தொகையின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் என சுங்க அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *