திருக்கோவிலில் ஆசிரிய வாண்மைத்துவ சான்றிதழ் வழங்கல் நிகழ்வு

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலய ஆசிரியர் வாண்மைத்துவ சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று திருக்கோவில் கல்வி வலய ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய ஒன்று கூடல் மண்டபத்தில் முகாமையாளர் திரு. சுதாகரன், திருக்கோவில் வாண்மை விருத்தி நிலைய ஆசிரியரின் தலைமையில் இடம்பெற்றது.

 

இதில் ஈ.பி 2-I மற்றும் 2-II ஆகிய தரங்களில் வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சையில் சித்திபெற்ற ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. உதயகுமார் கலந்து கொண்டார்.

 

மேலும் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக விரிவுரையாளர் திரு. விக்னேஸ்வரன், விரிவுரையாளர் திரு. ரபியூஸ், விரிவுரையாளர் திருமதி. றிஷ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் 2-I மற்றும் 2-II தரத்தைச் சேர்ந்த 164 ஆசிரியர்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *