போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று(03) தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சிறுவர் நன்னடத்தைப் பிரிவினர் போதைப் பொருள் பாவனையில் ஏற்படக்கூடிய தீமைகள் தொடர்பாகவும் தொலைபேசியினால் ஏற்படும் பாரிய அளவிலான பாதிப்புகள் தொடர்பாகவும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடைபெற்றது.
இதன் போது தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம் திசாநாயக்க தர்மபுரம் மத்திய கல்லூரி அதிபர் திருமதி இந்திராணி, கண்டாவலைப் பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தைப் பிரிவினர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கருத்துக்கள் வழங்கப்பட்டன.

