30 இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் தர்மபுரம்  பொலிஸாரால் மீட்பு

புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள மரத்தளபாட உற்பத்தி நிலையத்திற்கு எந்தவித அனுமதிப்பத்திரமும் இன்றிய நிலையில் கன்டர் ரக வாகனம் மற்றும் கப்ரக வாகனங்களில் முதிரை மரக்குற்றிகளை இன்று அதிகாலை 2.00மணியளவில் தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இரவு இரண்டு மணி அளவில்  கொண்டு வந்த  முதிரை  மரக்குற்றிகளை மீட்ட பொலிஸார் வாகனங்கள் மற்றும் மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

 

வாகனம் மற்றும் சந்தேக நபர்களை நாளை(05) கிளிநொச்சி  நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *