நாட்டில் இடம்பெற்ற நான்கு மனித படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பொலிஸாரால் தேடப்பட்டு வந்த திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் குழுக்களின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஹோமாகம பகுதியில் செவ்வாய்க்கிழமை (18) மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
31 வயதுடைய கொனபொல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டிருந்தார். இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்த குறித்த சந்தேகநபர் அண்மையில் மீண்டும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், தலைமறைவாகியிருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி அவிசாவளை பிரதேசத்தில் மூவரை சுட்டுக் கொன்றமை மற்றும் மற்றொருவருக்கு காயம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

