நள்ளிரவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர்கள்..!

மாத்தறையில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

தேவுந்தர ஸ்ரீ விஷ்ணு கோயிலின் தெற்கு நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள சிங்கசன சாலையில் நேற்று இரவு 11.45 மணியளவில், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேனில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள், T-56 மற்றும் இரண்டு 9 மீல்லி மீற்றர் துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் தெவிநுவர பிரதேசத்தில் வசிக்கும் 28 மற்றும் 29 வயதுடைய யோமேஷ் நதீஷான் மற்றும் பசிந்து தாருக என்ற இரண்டு இளைஞர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *